தமிழ் வளர்ச்சித் துறை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்லூரிகளிடையே மொழித் திறனை வளர்க்கும் நோக்கில், மேடைப்பேச்சு, கட்டுரை ரூ கவிதைகள் எழுதுதல் ஆகிய போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது. பங்கேற்பவர்களின் சுய திறன் வெளிப்படும் வகையில் போட்டி துவங்கும் முன் மட்டுமே தலைப்புகள் தருவது இப்போட்டிகளின் சிறப்பம்சம் ஆகும். நாகை மாவட்டத்திற்கான இப்போட்டிகள் நாகை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரீத்தி என்கிற 12 ம் வகுப்பு மாணவி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்று தமிழக அரசின் ரூ. 10000 க்கான ரொக்கப்பரிசு பெற்றார். மேலும் அதே பள்ளியின் ஹீலிஸ் இன்பான்டினா என்கிற 12 ம் வகுப்பு மாணவி கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து ரூ. 5000 க்கான ரொக்கப்பரிசைப் பெற்றார். பரிசுகளை நாகை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை செயலர் அன்பரசி வழங்கினார். பரிசு பெற்ற மாணவிகளை முதன்மைக் கல்வி அலுவலர் க. குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் ந. குமார் மற்றும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்தினர்.